search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகிலேஷ் யாதவ்"

    • உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்றார் அகிலேஷ் யாதவ்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு வாரணாசி, ரேபரேலி, அமேதி, பாரபங்கி, ஜான்சி, காசியாபாத் உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ல 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், எல்லாம் நன்றாகத்தான் முடிந்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. எங்களுக்குள் மோதல் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்தார்.

    • சமாஜ்வாடி கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர்.
    • எம்எல்சி-யாகவும் இருந்த நிலையில், கட்சி உறுப்பினர் பதவி என அனைத்தில் இருந்தும் விலகல்.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் கடந்த 13-ந்தேதி தேசிய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது தனக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் உத்தர பிரதேச மாநில மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கடந்த பிப்ரவரி 12-ந்தேதி உங்களுடன் பேசிய பிறகு, தேசிய பொதுச்செயலாளர் பதவியை 13-ந்தேதி ராஜினாமா செய்தேன். என்னுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் முன்முயற்சி எடுக்கப்படாததால், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு கடிதத்தில் "நான் சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மேலும் எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ராம்சரித்மனாஸ் மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், கட்சி சார்பாக யாரும் குரல் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தர பிரதேச மாநிலத்தின் வலுவான கட்சியாக சமாஜ்வாடி திகழ்ந்து வருகிறது.
    • பல மாநிலங்களில் சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருவதால் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி கட்சியாக சமாஜ்வாடி கட்சி இருந்து வருகிறது. இந்த கட்சி உத்தரகாண்ட், மத்தயி பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் இந்த கட்சி தேசிய கட்சியாக கருதப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.

    சமாஜ்வாடி கட்சிக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கு அமைப்புகள் உள்ளன. இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவின் அறிவுறுத்தலின்படி தலைவர் பதவி உள்பட தமிழ்நாடு பிரிவு கலைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்படடுள்ளது.

    • சண்டிகர் மாநில மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
    • தேர்தல் நடத்திய அதிகாரி ராஜினாமா செய்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் கண்டிப்பு.

    சண்டிகர் மாநிலத்தின் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு மூலமாக, பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் தேர்தலில் முறைகேடு நடந்தது உறுதியானது என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் முறைகேடு நடந்ததை அதிகாரி ஒப்புக்கொண்டது, பாஜனதா எவ்வளவு அதிகார பசியில் உள்ளது என்பதை காட்டுகிறது. சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்பின் படியும் பா.ஜனதா நாட்டு மக்களிடமும், எங்கெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலமும் இது போன்றவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்காது" என்றார்.

    முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி "அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் குற்றச் செயல்களை செய்யும் அதிகாரிகளும் இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் குடும்பத்தையும் அழித்துவிடும், ஏனெனில் இதுபோன்ற குற்றங்கள் தேசத்துரோகத்திற்கு குறைவானவை அல்ல. மேலும் அவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்." என்றார்.

    • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
    • 15 இடங்களுக்கு மேல் வழங்க முடியாது என அகிலேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்.

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க இந்த கூட்டணி தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்- மற்ற கட்சிகள் இடையிலான இடங்கள் பங்கீடு தொடர்பான இடியாப்ப சிக்கல்தான்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரஸ்க்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிகிறது. அம்மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ்க்கு அகிலேஷ் யாதவ் ஒதுக்கியதாக கூறப்பட்டது.

    ராகுல் காந்தி தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைகிறது.

    இந்த நிலையில் 15 இடங்களுக்கு மேல் ஒன்று கூட அதிகமாக கொடுக்க முடியாது. இதை ஏற்றுக் கொண்டால்தான் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிசன் போட்டதாக தெரிகிறது.

    இதனால் இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவ் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி 2019-ல் நாடு முழுவதும் 52 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இந்தி பேசும் மாநிலங்களில் அதன் வெற்றி மிகவும் குறைவாகும். உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. அதுவும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டும்தான். அமேதி தொகுதியில் கூட ராகுல் காந்தி தோல்வயிடைந்தார். இதனால் அகிலேஷ் யாதவ் இறுதியாக 15 இடங்களுக்கு மேல் கொடுக்க மறுத்து வருகிறார்.

    மகாராஷ்டிராவில் சரத் பவார்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தன.
    • சமாஜ்வாதி கட்சி ஆதரவில் ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார். இவர் இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது.

    மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இருக்கிறது. சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மறைந்த அமர் சிங் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை தொடங்கினார். தற்போது அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    ராஷ்டிரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிகள் வரும் மக்களவையில் இணைந்து போட்டியிடும் என கடந்த மாதம் 19-ந்தேதி அறிவித்தன.

    இந்த நிலையில் ஜெய்ந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-ஆர்எல்டி கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆர்எல்டி போட்டியிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆர்எல்டி பாக்பாத், பிஜ்னோர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் எனவும், மாநிலங்களவை மற்றும் உ.பி. மேலவையில் தலா ஒரு இடம் பா.ஜனதா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாக்பாத் தொகுதியில் இரண்டு முறை பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் சத்ய பால் சிங் 2014-ல் அமர்சிங்கையும், 2019-ல் ஜெயந்த் சவுத்ரியையும் தோற்கடித்துள்ளார்.

    பிஜ்னோர் தொகுதியில் 2014-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. அத்துடன் மத்திய மற்றும் மாநில மந்திரி சபையிலும் இடம் வகிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "அதுபற்றி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. எது நடந்தாலும் அது பத்திரிகையில் செய்தியாக வந்துவிடும். எனக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றார்.

    • உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 69 இடங்களில் போட்டியிடுகிறது.
    • டபுள் என்ஜின் அரசு என்று சொல்லப்பட்ட போதிலும் 10 வருட பட்ஜெட்டில் பணவீக்கம் குறையவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக தற்போதைய எம்.பி.க்கள் யாரையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் களம் இறக்காது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்ல இருக்கிறேன். உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பா.ஜனதா மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காது. ஆனால் ஒருவரை தவிர்த்து. அவர் தனது தொகுதியை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

    சமாஜ்வாதி கட்சி வெற்றியை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜனதா கூட்டணியை PDA (Pichchde, Dalit, Alpsankhyak- பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர்) வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிடிஏ என்பது ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையால் துன்புறுத்தப்பட்ட 90 சதவீத மக்கள் பற்றியது.

    டபுள் என்ஜின் அரசு என்று சொல்லப்பட்ட போதிலும் 10 வருட பட்ஜெட்டில் பணவீக்கம் குறையவில்லை. விவசாயிகளை யாராவது ஒருவர் துன்பத்தில் ஆழ்த்தியிருந்தால், அது பா.ஜனதாதான்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    உத்தர பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான இந்தியா கூட்டணி களம் இறங்குகிறது. அகிலேஷ் யாதவ் கட்சி 69 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 11 இடங்களில் போட்டியிடுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் அனைத்துக் கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்

    இதற்கிடையே, மத்தியில் உள்ள பா.ஜ.கவை எதிர்க்க அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.
    • விரைவில் மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் நடக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார்.

    அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து ராகுலை மீண்டும் நடை பயணம் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அதை ஏற்று ராகுல் மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடை பயணத்தை தொடங்கி உள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். விரைவில் மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் நடக்க உள்ளார்.

    இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    ராகுலின் யாத்திரையில் பங்கேற்க மாட்டேன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் காங்கிரஸ் அழைப்பை பரிசீலனை செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    அதுபோல உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் ராகுலின் நடை பயணத்தை புறக்கணிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ராகுல் நடைபயணம் வரும்போது சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் யாரும் அதில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அகிலேஷ் அறிவித்துள்ளார்.

    இது காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • இதில் பிரதமர் மோடி, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ம் தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    இதற்கிடையே, மூலவர் ராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சமாஜவாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், அது கடவுளின் விழா. கடவுளை விட முதல் மந்திரி பெரியவராக இருக்கமுடியாது. ராமரால் அழைக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக செல்வார்கள் என தெரிவித்தார்.

    • ஜனநாயகம், அரசியலமைப்பு இல்லாதபோது வாக்குகள் நம்மிடம் இருந்து பறிக்கப்படும்.
    • பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றைத் தவிர நாடு கடந்த 10 ஆண்டுகளில் எதையும் பெறவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ், ஜனநாயகத்தின் புனிதத்தை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

    புத்தாண்டு தினத்தையொட்டி கட்சி தலைமையகத்தில கூடியவர்களுக்கு, இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கட்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தொண்டர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா அதிகாரத்திற்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு பூத் அளவில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். வாக்குகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

    2024 மக்களவை தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலைப்பை காப்பாற்றுவதற்கானது. ஜனநாயகம், அரசியலமைப்பு இல்லாதபோது வாக்குகள் நம்மிடம் இருநது பறிக்கப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் நீதியை பெற முடியாது.

    பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றைத் தவிர நாடு கடந்த 10 ஆண்டுகளில் எதையும் பெறவில்லை. பா.ஜனதா அவர்களின் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு பலவீனம் அடைந்துவிட்டது. 2024 மக்களவை தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது பா.ஜனதாவை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • 4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது.
    • எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி சேர்மன் முன்னிலையில் கவுன்சிலர்கள் மோதிக் கொண்டனர்.

    WWE மல்யுத்தம் போட்டியை பார்த்தீர்கள் என்றால் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வார்கள். பின்னர் சேர், பெஞ்ச் போன்றவற்றால் தாக்கிக் கொள்வார்கள். அதுபோன்ற சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் உள்ளது.

    4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடத்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் நகராட்சி சேர்மன் மற்றும் எம்.எல்.ஏ. பிரசான் சவுத்ரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென் அங்கிருந்தவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    மோதல் ஒரு கட்டத்தில கைகலப்பாக மாறி ஒருவருக்கு ஒரவர் சேர்களை கொண்டு தாக்க தொடங்கினர். ஒருவர் சேர் மீது ஏறி மற்றொருவரை தாக்க முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோவை உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பா.ஜனதாவை கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

    "இந்த நிகழ்வு மாநில உள்ளூர் நிர்வாகத்தை பற்றி மட்டும் கேள்வி எழுப்பவில்லை. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் உள்ள பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது.

    எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படாத நிலையில், ஆய்வுக் கூட்டத்தில் வேறு என்ன நடந்திருக்கும். அதனால்தான் ஷாம்லியில் உள்ள கவுன்சிலர்களிடையே அடிதடி நடைபெற்றுள்ளது. பா.ஜனதா ஆட்சி கற்பிப்பது சொந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொண்டு ஆய்வு கூட்டத்திற்கு வாருங்கள் என்பதுதான்" என்றார்.

    ×